4.7
Biographies
"காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நிண்டன. 'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்....
இது உடையவர் ராமானுஜரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைச் சரிதம். அவரது ஆயிரமாவது திருநட்சத்திரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழில் 108 நாள்களுக்குத் தொடர்ந்து வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது."
© 2022 Storyside IN (Audiobook): 9789355442826
Release date
Audiobook: 18 April 2022
4.7
Biographies
"காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நிண்டன. 'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்....
இது உடையவர் ராமானுஜரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைச் சரிதம். அவரது ஆயிரமாவது திருநட்சத்திரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழில் 108 நாள்களுக்குத் தொடர்ந்து வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது."
© 2022 Storyside IN (Audiobook): 9789355442826
Release date
Audiobook: 18 April 2022
Step into an infinite world of stories
Overall rating based on 56 ratings
Informative
Heartwarming
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 56
Sriram
26 Apr 2022
Every one should read this book at least once in their lifetime. I definitely thank both author and narrator . They have done such an incredible job. Hats off to both of you.
Rathiga
1 Jul 2022
நன்றி இறைவா
Arun
26 Apr 2022
Govinda 🙏
Jaikumar
3 Mar 2024
பற்பல வகைகளில் வேறுபாடு கொண்டிருந்தாலும் அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளக்கியதற்காகவே பாராட்டலாம்!கம்யூனிஸ.சித்தாந்தியாக பார்க்கப்படும் ப.ராகவனின் எழுத்தாளுமை .. சூப்பர் ஐயா! வாழ்துக்கள்!ஆனால்.. வைணவ நெடி கொஞ்சம் தூக்கல்.. வைணவத்தை போற்றுவதற்காக அத்வைதத்தை தாழ்த்தியது நடுநிலைமை தவறியதாக சறுக்கியதாக தோன்றுகிறது!வாசித்தவருக்கு பாராட்டுக்கள்!
Prabhu
24 Apr 2022
One of the best humanity book
Bairava
2 Oct 2023
Must listen
Arun
28 Apr 2022
மிக அருமை
Srivathsan
7 Nov 2023
Excellent book by Pa Ra. Excellent narration by Mr Jagan.
Ethirajan
15 Aug 2022
A great history of a big daddy of yesu
சிவபாலன்
22 May 2023
எழுத்து, கருத்து மற்றும் உச்சரிப்பு அனைத்தும் அருமை.
English
India