Step into an infinite world of stories
Fiction
இந்த ஜூன் 3-க்கு நான் என்னுரை எழுதும் போது எனக்குள் என்னன்னமோ எழுகிறது. அது அத்தனையும் விளக்கவேண்டுமெனில், படிக்கும் உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தையில் விளக்கினால் மட்டுமே போதுமான பொருத்தமென்று எனக்குள் தோன்றுகிறது.
இந்தியாவில் 1757-ல் வெள்ளைzszயர்கள் ஆட்சி தொடங்கியது. அதன் அடிமை வாழ்க்கை பிடிக்காமல் நம்மவர்களில் கட்ட பொம்மன், மருதுபாண்டியர், திப்புசுல்தான் போன்றவர்கள் போராடிய போதிலும் அது மக்கள் இயக்கமாக மாறியது. 1915 மகாத்மா காந்தி தலைமை ஏற்ற பிறகு தான் இங்கே நான் தேதி குறிப்பிடவில்லை, ஆனால் சேதி நிஜம், ஏன் உலகறிந்து உண்மையும் கூட! -
இன்றைய மாணவர்கள் கலையியலைப் படிக்கலாம். இன்றைய மாணவர்கள் அறிவியலைப் படிக்கலாம். ஏன் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விஞ்ஞானத்தை வெற்றி பெறச் செய்யலாம். ஆனால் சுதந்திர மண்ணில், நிரந்திரமாக நம் எதிர்காலத்தில் இப்படியிருக்க வேண்டுமென்று நிதானமாக தன் இளமைபருவத்தில் மட்டும் யோசிக்க வேண்டும் என்று தான் தம்பி சந்திரமௌலி இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.
இவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நம் மனக் கண்முன் காட்டவில்லை. ஆசிரியர்கள் எதிரே தெரியாத பதிலுக்கு மாணவர்களையும், மாணவியர்களையும் நிறுத்தவில்லை. இதையெல்லாம் விடுத்துப் பள்ளிப் பருவத்தில் துள்ளிவிளையாடும் விடுமுறை நாட்களில் பசிக்கும், பாசத்திற்கும், படிப்பிற்கும் ஏங்கும் ஒர் இளைஞன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தாயின் வேதவாக்குக்குக் கட்டுப்பட்டு துடிக்கும் இதயத்தை ஒரு நொடிப் பொழுதில் எடுத்துப் பார்க்க ஆசைப்படுகிறாள் நாயகி ஒருத்தி.
இந்தச் சிறுபிள்ளை விளையாட்டின் விளைவு தான் என்ன...?
விளையாட்டு வினையில் முடிந்ததா...?
இல்லை அவள் துணையில் முடிந்ததா...?
ஏன் உங்களுக்குள் குழப்பம், துடிப்பில் முடிந்தது...
இரவு, பகல் இருபத்து நாளு மணிநேரமும் அவன் இதயத்துடிப்பான நாளைக்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து அறுநூற்று எண்பது முறை ஒரே ஒரு
வார்த்தையுடன் அந்த இதயம் துடித்துக் கொண்டே வாழ்கிறது.
அது என்ன வார்த்தை என்று நீங்களும் தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது.
அன்புடன்,
கு. பிச்சான்டி M.A.,
Release date
Ebook: 15 September 2020
English
India