Step into an infinite world of stories
திருமதி. எஸ். லட்சுமி சுப்பிரமணியம் எழுதியுள்ள இந்த நாவல் - ஒரு காதல் காவியம்.
திடுக்கிடும் சம்பவங்கள் இல்லை. திடீர்த் திருப்பங்கள் இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இல்லை.
ஆனால்
மூன்றே பாத்திரங்களைக் கொண்டு - ஒரு ஆண் இரண்டு பெண்கள்-கமல், நீரு, அனு மூவரையும் வைத்து ஒரு காதல் கவிதா சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.
வெறும் மன உணர்வுகளை வெளியிடும் முறையிலேயே படிப்போரை மயக்கி விடுகிறார்.
அடடா என்ன நடை!
குற்றாலச் சாரலில், குளிர்ந்து வரும் தென்றலில் மிதந்து வரும் மெல்லிய மணத்தை அனுபவிப்பது போல...
ஊருக்கு வெளியே, ஆற்றின் வெண்மணலில், அமுத நிலவொளியில், ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு, வெகு தூரத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையை அனுபவிப்பது போல...
நீங்கள் படித்து அனுபவித்த பிறகு தான் அந்த தீந்தமிழ் கவிதை நடையைப் புரிந்து கொள்ள முடியும்!
Release date
Ebook: 5 February 2020
English
India