Step into an infinite world of stories
5
Religion & Spirituality
சமஸ்கிருதத்தில் இது "ஸ்ரீ ஸ்கந்த புராணம்" என்று வழங்கப்படுகிறது. இந்த ஸ்கந்த புராணத்தில் "சங்கர சங்கிதை" என்றொரு பகுதி உள்ளது. அதனுள் "சிவ ரகசிய காண்டம்" என்கிற பாகத்தில் காணப்படும் முதல் ஆறு காண்டங்களே கந்த புராணமாகும். இதை சிவ புராணங்களாகிய பத்தில் ஒன்று என்றும் கூறலாம். இது நூறாயிரம் அதாவது ஒரு லட்சம் சுலோகங்களை உடையது. இதன் ஆறு காண்டங்கள் "உற்பத்தி காண்டம்", அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்பவையே அவை. இந்த ஆறு காண்டங்களும் 91 படலங்களாக 10,345 பாடல் வரிகளைக்கொண்டு விளங்குகிறது. வடமொழியில் ஸ்ரீ வியாசரால் எழுதப்பட்ட இந்த ஸ்கந்த புராணம் தமிழ் மொழியில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவரால் கந்த புராணம் என்றாகி நமக்குக் கிடைத்தது.
Release date
Ebook: 15 December 2023
English
India
