Step into an infinite world of stories
பிரபல எழுத்தாளர் கயிலைநாதன் இறந்த பிறகு, ஆறு மாதமாய் பூட்டியே கிடந்த அவரது அறையைச் சுத்தம் செய்ய செல்கிறாள் அவரது மனைவி சிவபாக்கியம்.
அவர் கைப்பட எழுதிய ஒரு நாவல் பேப்பர் கற்றையாய் இருக்க, எடுத்துப் பார்க்கிறாள். அது முடிக்கப்படாமல் இருக்க அதை குப்பைகளோடு குப்பையாய் போட்டு விடுகிறாள். இரவு முழுவதும் அந்தப் பேப்பர்க் கற்றையிலிருந்து ஏதோ சத்தம் வந்து கொண்டேயிருக்க அதை பழைய பேப்பர்க்காரனுக்குப் போட்டு விடுகிறாள். அதை எப்படியாவது அச்சில் ஏற்றி விடுவது என்கிர குறிக்கோளோடு அதனுள் கயிலை நாதனின் ஆவி உட்கார்ந்திருப்பதை அவள் அறியாள்.
அவன் அதை ஒரு பலகார வண்டிக்காரனுக்குத் தந்துவிட, பலகார வண்டிக்காரன் அதிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழிக்கப் போக, பெரிதாய் ஒரு காற்றும், வானத்திலிருந்து ஒரு பேரிடியும் வந்திறங்க, அந்தப் பேப்பர்க் கற்றை கயிலைநாதனின் பரம ரசிகன் ஒருவனின் கைக்குச் செல்கிறது. அவன் தன்னையேயறியாமல் அந்தக் கதையின் மீதியை எழுதி முடிக்கிறான்.
பணத்தாசையால் அதை தான் எழுதியதாகச் சொல்லி பரிசையும் பெறுகிறான் அந்த ரசிகன்.
அதன் காரணமாய் அவன் சந்திக்கும் விளைவுகளை திகிலோடு எழுதியுள்ளார் ஆசிரியர்.
வாசித்து ரசியுங்கள்.
Release date
Ebook: 18 May 2020
English
India