Step into an infinite world of stories
Thrillers
பச்சை சிவன் காடு மிகவும் விறுவிறுப்பான ஒரு அமானுஷ்ய நாவல் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியில் இருக்கும் காட்டாற்றில் குளித்துக் கொண்டிருக்கிற இளம்பெண்... செங்குருவியின் கையில் ஒரு மரகதலிங்கம் (பச்சைசிவலிங்கம்)அகப்படுகிறது மரகலிங்கத்தை மலை கோயிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.ஆனால் அந்த மரகதலிங்கத்தைக்களவாடி போக இரண்டு முரடர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காட்டுப்பாதையில் ஓடுகிறவள் ஒற்றையடி பாதையின் முடிவில் இருக்கும் அருவிக்குள் குதிக்கிறாள் குதித்த இடத்தில் ஒரு குகை இருக்கிறது... முரடர்களும் அருவிக்குள் குதித்து... செங்குருவியை.. நெருங்கி விட வேறு வழி என்று குகைக்கும் ஓடுகிறாள்... அங்கே.. கொடிய மந்திரவாதி காத்திருக்கிறான்... ஒரு பக்கம் முரடர்கள்... இன்னொரு பக்கம் கொடிய மந்திரவாதி... நடுவில் சிக்கிக் கொள்ளும் செங்குருவி.... கையில் இருக்கும் மரகதலிங்கம்.... செங்குருவியின் கதி என்ன ஆனது? செங்குருவி தப்பித்தாளா? கொடியவர்களின் கதி என்ன? படித்து பாருங்கள் பச்சை சிவன் காடு.. நாவலை...
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India