Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
1 Ratings

2

Language
Tamil
Format
Category

Fiction

கீதா பரபரத்துக் கொண்டு இருந்தாள்! கால்கள் தரையில் பரவாமல், காற்றிலே மிதக்கும் வானத்துத் தேவதைபோல, வீட்டுக்கும், வாசலுக்குமாக ஓடிக்கொண்டு இருந்தாள். வெளியில் - வீதியில் ஒரு சிறு ஓசை கேட்டால் போதும், “அதோ அண்ணா வந்துவிட்டார்!” என்று வாசலுக்கு ஓடுவாள்! “சே” என்று ஏமாற்றத்துடன் திரும்புவாள். “கொஞ்சம் நில்லுடி” என்று குரல் கொடுத்துக் கொண்டே சிவகாமி அம்மாள் வந்தாள். அவள் கையில் மல்லிகைக் கொத்து இருந்தது. “இந்தப் பூவை தலையில் வைத்துக் கொள்.” கீதா அழகாக இரட்டைச் சடை பின்னியிருந்தாள். இரண்டு கருநாகப் பாம்புகள் போல அவை நீண்டு தொங்கின. “சீக்கிரம் வையுங்கள் அம்மா” என்று அவசரப்பட்டுக் கொண்ட கீதா, தாயிடம் தலையைத் திருப்பிக் காட்டினாள். அவள் கூந்தலில் மல்லிகைச் சரத்தை வைக்க சிவகாமி அம்மாள் முயற்சித்தபொழுது, வெளியில் “ஜல் ஜல்’ என்ற ஓசை கேட்டது. “அம்மா அதோ குதிரை வண்டி, அண்ணா வந்து விட்டார்” என்று கூறிக்கொண்டே கீதா வாசலுக்கு ஓடினாள். ஆசையோடு வெளியில் எட்டிப் பார்த்தாள். அது குதிரை வண்டிதான். ஆனால், அது அவளது வீட்டைத் தாண்டிப் போய்க் கொண்டு இருந்தது. அந்த வண்டியில் அவளுடைய அண்ணன் இல்லை. செந்தில்ஆண்டவன் கோயிலுக்குச் செல்லும் யாரோ அமர்ந்து இருந்தார்கள். கீதா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் திரும்பினாள்

கூடத்தில் அமர்ந்து இருந்த சிவநேசர், “என்னம்மா கீதா உன் அண்ணன் வந்தாகி விட்டதா?” என்று கேட்டார். அவரது குரலில் கேலியும் கிண்டலும் குழைந்து இருந்தன. “இல்லேப்பா” என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டே கீதா உள்ளே சென்றாள். மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிவநேசருக்கும்தான் இருந்தது. ஆனால் அவர் கீதாவைப் போல சிறு பிள்ளை அல்ல. எனவே, ஆசையை அடக்கிக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருடைய மூத்த பிள்ளை குமரேசன், மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒரே மகனுங்கூட. இராணுவத்தில் பணியாற்றுகிறான். அவன் விடுமுறையில் வருகிறான் என்றால், வீட்டில் உள்ள அனைவருமே ஆவலுடன் தானே எதிர்பார்ப்பார்கள்! கீதாவின் கூந்தலைப் பிடித்து இழுத்து, பூவை வைத்துக் கொண்டே “என்னடி உன் அண்ணன் வந்தாகி விட்டதா!” என்று சிவகாமி அம்மாளும் குத்தலாகக் கேட்டாள். கீதாவுக்குக் கோபம் வந்து விட்டது. “ஏம்மா அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?” என்று வெடுக்கென்று கேட்டாள். “இல்லாமல் என்னடி? என் ராஜாவைப் பார்த்து எவ்வளவு காலமாகி விட்டது!” சிவகாமி அம்மாள் பேசவில்லை, பெற்ற வயிறு பேசியது. பிள்ளையைக் காணும் ஆவல் அந்தத் தாய் உள்ளத்தில் வெள்ளம் போல புரண்டு கொண்டு இருந்தது. ஆனால் கீதாவைப் போல பரபரக்கவில்லை. கீதா ஏமாற்றத்தோடும், எரிச்சலோடும் உட்கார்ந்து விட்டாள். ‘சே இந்த அண்ணா சுத்த மோசம்’ என்று அண்ணனை அர்ச்சனை பண்ணத் தொடங்கி விட்டாள். அப்பொழுது வெளியில் மீண்டும் “ஜல் ஜல்” என்ற சலங்கை ஓசை கேட்டது. அந்த ஓசை கீதாவின் காதுகளில் நன்றாக விழுந்தது. ஆனால், அவள் பிடிவாதமாக பிடித்து வைத்த பிள்ளையார் போல இருந்த இடத்திலே இருந்தாள், இன்னொரு முறை ஏமாந்தால், அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது

© 2025 PublishDrive (Ebook): 6610000768899

Release date

Ebook: 3 April 2025

Others also enjoyed ...

  1. Kaarana Pookkal Devibala
  2. Meendum Penn Manam Lakshmi
  3. Gangaiyum Vandhaal Lakshmi
  4. Kanni - Ilamai - Kanavu Rajendrakumar
  5. Nilavai Thedum Vaanam Vidya Subramaniam
  6. Latchiyavadhi Lakshmi
  7. Then Malli Poove... Daisy Maran
  8. Unnodu Thanjam Kolkirean Naanadi M. Maheswari
  9. Neethaney Enathu Nizhal... Muthulakshmi Raghavan
  10. Nadhavadivanavale Kannamma Vidya Subramaniam
  11. Nilavodu Vaanam Muthulakshmi Raghavan
  12. Neengatha Ninaivugal... Muthulakshmi Raghavan
  13. Aval Oru Thiru Nangai Yamuna
  14. Naan Thedum Jevvanthi Poovithu Irenipuram Paul Rasaiya
  15. Aasai Kodi Sumanthu! R. Manimala
  16. Vedhamadi Nee Enakku... R. Sumathi
  17. Idhayam Thedum Ennuiyre...! Daisy Maran
  18. Chithirai Nilave! J. Chellam Zarina
  19. Yaathumagi Nindrai! Lakshmi Sudha
  20. Manam Virumbuthae Unnai V. Usha
  21. En Varna Nila Kanchana Jeyathilagar
  22. Kanavennai Kalavaduthey...! Daisy Maran
  23. Kaadhal Sadugudu Vimala Ramani
  24. Ithu Thana? Ivan Thana? Vedha Gopalan
  25. 12288 Kaadhal Vakaigalil Ilakkiyam Tharum Sila Kaatchigal! S. Nagarajan
  26. Ullam Pesum Kaadhal Mozhi Lakshmi Subramaniam
  27. Paartha Muthal Naalil…! Kanchana Jeyathilagar
  28. Kalyana Raagam Latha Mukundan
  29. Idhayam Ezhuthiya Kavithai... Indira Nandhan
  30. Ennuyire… Vedha Gopalan
  31. Vasiya Valaigal Kanchana Jeyathilagar
  32. Malare Mounama? R. Manimala
  33. Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  34. Mathura Nila Lakshmi Rajarathnam
  35. Nenjam Yekkathil Thavikkuthu Maheshwaran
  36. Aranmanai Kiliyum Kollywood Directorum!! Bhama Gopalan
  37. Suriyan Theyumo? Rajashyamala
  38. Kaatril Kalanthavale...! Lakshmi Rajarathnam
  39. Uyir Painkili Vidya Subramaniam
  40. Uyiriley Ninaivugal Thalumbuthey! Rajeshwari Sivakumar
  41. Kaadhalenum Vaanavil Vaasanthi
  42. Neeyum Naanum Ondru Than Parimala Rajendran
  43. Nenjukkul Endrendrum Neethane…. Lakshmi Ramanan
  44. Chinna Vizhi Parvaiyiley Ananthasairam Rangarajan
  45. Thotti Meengal Harani
  46. Sontham Illatha Bandham Vaasanthi
  47. Anbenum Ragasiyam Mukil Dinakaran