Fiction
வித்யா ஒரு ஓவியப் பைத்தியம். மற்ற பெண்கள் சினிமா, ஷாப்பிங் மால் என்று சுற்றும் போது, இவள் மட்டும் நகரில் எங்காவது நடைபெறும் ஓவியக் கண்காட்சிக்கு செல்வாள். ஒரு ஓவியக் கண்காட்சியில் தன்னை மெய் மறக்கச் செய்த ஓவியங்களை வரைந்த ஓவியர் சேகரை நேரில் பாராட்டச் செல்கிறாள். அப்போது அவர் அழகில் மயங்கி காதலில் விழுகிறாள். எதிர்ப்பே இல்லாத அவர்களது காதல் எளிதாய்த் திருமணத்தில் முடிந்தது.
ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்சினைகள் தோன்றின. ஓவியம் வரையும் சேகரால் குறைந்த அளவே வருமானம் ஈட்ட முடிந்ததால், பொருளாதாரச் சிக்கல் தோன்றுகின்றது. “அந்த மாதிரி”யான படங்கள் வரைய, அதிக தொகைக்கு வாய்ப்பு வர, திட்டித் திருப்பியனுப்புகிறான் சேகர்.
ஆனால், வித்யாவோ, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை நமக்கு காசு பணம்தான் முக்கியம், என்று சொல்லி கணவனை ஒப்புக் கொள்ள வைக்கிறாள்.
அரை மனதுடன் சென்ற சேகர், அங்கே ஆபாச ஓவியத்திற்கு மாடலாக வந்திருந்த தன் பழைய காதலியைக் கண்டு நொந்து போகிறான்.
அதன் பிறகு அவர்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகளை ஒரு கவிதை நயத்தோடு படைத்துள்ள எழுத்தாளர் நிச்சயம் வாசகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டு விடுவார்.
Release date
Ebook: 5 February 2020